கடந்த ஆட்சிக் காலத்தில்; கறவை பசுக்கள் இறக்குமதி – ரூபா 211 கோடி மோசடி.!!!
கடந்த ஆட்சிக் காலத்தில் 11 ஆயிரம் கறவைப் பசுக்களை வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட முற்பணம் மூலம் அரசாங்கம் 211 கோடி ரூபாவை இழக்க நேர்ந்ததாகவும், இந்த மோசடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டுமெனவும் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர்களான பி.ஹரிசன், விஜித் விஜயமுனி சொய்ஸா, லக் ஷமன் யாப்பா, லக் ஷமன் வசந்த பெரேரா ஆகியோரும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற கறவை மாடு இறக்குமதி செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் II ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான 2025.05.21 அன்று நாடாளுமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, மைத்திரி, ரணில் மீது நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளுக்கு
பொறுப்புக்கூற வேண்டுமென சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை மற்றும் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான 2025.06.04 அன்று நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் இரண்டாவது அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய எம்.பி,
அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்தகால ஊழல் மோசடிகளை மறந்து செயற்படுகின்றனர். பல ஊழல் மோசடிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தற்போது புனிதர்களைப் போன்று பேசுகிறார்கள்.
11 ஆயிரம் கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக செலுத்தப்பட்ட முற்பணம் ஊடாக பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். எவ்விதமான முறையான தேசிய பெறுகையும், முறையான திட்டமிடலும் இல்லாமல் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் முற்பணம் செலுத்தப்பட்டதால் அரசாங்கம் 211 கோடி ரூபாவை இழந்துள்ளது. அந்த இழப்புக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, மற்றும் பி. ஹரிசன், விஜித் விஜேமுனி சொய்ஸா, லக்ஷமன் யாப்பா, லக்ஷமன் வசந்த பெரேரா ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும். எவரும் அதிலிருந்து விடுபட முடியாது.
கடந்த காலங்களில் தேசிய பால் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்காக கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவை பாற்பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்சவின் காலத்தில் கிராமிய அபிவிருத்தி என்ற பெயரில் இவ்வாறான பல மோசடிகள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றுள்ளன. கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் கறவை பசுக்கள் இறக்குமதியிலும் மோசடி செய்துள்ளார்கள். இந்த முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.