காத்தான்குடியில் பள்ளிவாயல்களுக்கு ஈத்தம் பழங்கள் பகிர்ந்தளிப்பு.!!!
சவூதி அரேபியா அன்பளிப்புச் செய்த ஈத்தம் பழங்கள் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மண்முனைப் பற்று, மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு பிரதேச பள்ளிவாயலுக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஈத்தம் பழங்கள் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் வைத்து அந்தந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த ஈத்தம் பழ விநியோகம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலக பொறுப்பதிகாரி சியாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் அவர்களினால் ஒரு பள்ளிவாயலுக்கு 18 கிலோ வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர் பர்ஹான் மற்றும் மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் உப தலைவர் வஹாப் உட்பட பள்ளிவாயல்களின் பிரிதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



