காத்தான்குடியில் – மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்; வைத்தியசாலையில் அனுமதி.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியில் அமைந்துள்ள பேக்கரி கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நின்று வர்ணம் பூசி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த சஹாப்தீன் வயது (58) என்பவர் ஆவார்.
குறித்த நபர் மின்சாரம் தாக்கியதில் வீதியில் விழுந்து படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.