மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்களை நோக்கி படையெடுக்கும்: பெருமளவிலான வெளிநாட்டு நாரைகள்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் வரட்சியான காலநிலையினால் குளங்கள், வயல்வெளிகளை நோக்கி வெளிநாட்டு நாரைகள் பெருமளவில் படையெடுக்க தொடங்கியுள்ளன.
வற்றி வரும் குளங்களிலும், வயல் வெளிகளிலும் இவ்வாறு பெருமளவிலான நாரைகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இக்காலப் பகுதியில் குறிப்பிட்ட நாரைகள் இனப்பெருக்கத்துக்காக மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி வருவதாக மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நமது நாட்டில் காணப்படும் வெள்ளை கொக்குகளுடன் இணைந்ததாக குறித்த வெளிநாட்டு நாரைகளும் நீர் நிலைகளில் காணப்படுகின்றன.
குறித்த நாரைகள் நீர் நிலைகளில் அதிகளவில் காணப்படுவதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அவற்றை ரசித்து வருகின்றனர்.


