மருதமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்தார் வைத்தியர் எஸ்.எம்.சபா.!!!
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனையின் முதலாவது சிறுவர் வைத்திய நிபுணராக சதுருத்தீன் முஹம்மது சபா தெரிவாகியுள்ளார். கல்முனை ஆதார வைத்தியசாலை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கொழும்பு சீமாட்டி வைத்தியசாலை, மற்றும் பல வைத்தியசாலைகளில் சேவையாற்றி வந்த நிலையில் தற்போது சிறுவர் வைத்திய நிபுணராக தெரிவாகியுள்ளார்.
பெரியநீலாவனை ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்று பின்னர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் உயர்கல்வியை கற்ற இவர் 2000ம் ஆண்டு ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக வைத்தியத் துறைக்கு தெரிவானார்.
பின்னர் 2015ல் பட்டப்பின் படிப்பு Post graduate Diploma in Child Health பட்டத்தை பூர்த்தி செய்ததுடன் 2015ல் வைத்திய நிபுணர் தெரிவு பரீட்சையிலும் சித்தியடைந்தார். தற்போது இவர், Doctor of Medicine in paediatric இறுதி பரீட்சையில் சித்தியடைந்து சிறுவர் வைத்திய நிபுணராக தெரிவாகியுள்ளார்.
மருதமுனை ,பெரியநீலாவணையில் பிரபலமான சிறுவர் வைத்தியர் என்பதுடன் இன மத பேதமின்றி எல்லோரிடமும் சகஜமாக நட்புடன் பழகக் கூடிய டொக்டர் எஸ்.எம்.சபா, மருதமுனையை சேர்ந்த சதுருத்தீன் – ஆசரா தம்பதிகளின் மூத்த மகனும் மருதமுனையின் பிரபல வர்த்தகர் அல்ஹாஜ்.எம்.ஐ.ஏ. பரீட் அவர்களின் மூத்த மருமகனுமாவார்.