கல்வியியல் சமூகத்தினருடன்; கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு.!!!
இன்று (11) புத்தளம் விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் புத்தளம் நகர அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வியியல் சமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றார்.
இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஜௌபர் மரைக்கார், ரிழ்வான் மரைக்கார் மாநகர சபை தலைமை வேட்பாளர் ரணீஸ் பதுர்தீன், மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நஸ்ஹத் மரைக்கார் உட்பட முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
– ஊடகப்பிரிவு








