இயற்கை பேரிடர் மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட – இலங்கை இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பாராட்டு.!!!
இயற்கை பேரிடர் நிலைமைகளை எதிர்கொண்ட வேளைகளில், மக்களை மீட்பதிலும், அத்தியாவசிய வசதிகளை வழங்குவதிலும் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய இலங்கை இராணுவத்தினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாய்நாட்டை உலகளவில் மதிப்புமிக்கதும் பாராட்டத்தக்கதுமான நாடாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கே மட்டுமன்றி, நாட்டு மக்களான நம் அனைவரிடமும் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் (21) தியதலாவிலுள்ள இலங்கை இராணுவக் கல்லூரியில் நடைபெற்ற அதிகாரிகள் பதவியேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.



