பாடசாலையில் சுகாதார பரிசோதனை: தகாத சிற்றுண்டிகள் பறிமுதல்.!!!
-பாறுக் ஷிஹான்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன் வழிகாட்டலின்பேரில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய அல் ஜலால் வித்தியாலயத்தில் பாடசாலை சுகாதார மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களின் சுகாதார நிலையை மதிப்பீடு செய்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
மேலும் பாடசாலை சுற்றுச்சூழல் பரிசோதனை மற்றும் சிற்றூண்டி பரிசோதனையும் இடம்பெற்றதுஇ இதில் மாணவர்கள் உட்கொள்ள தகாத உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்இ மாணவர்களின் உடல் நலம் மேம்படுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கடந்த ஏபிரல் 2 ஆந் திகதி நடைபெற்ற மேற்படி நிகழ்வின் போது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


