உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 19, 2025

Hot News

சிறுவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க; அரசாங்கம் தீர்மானம்.!!!

அரசாங்க மற்றும் தனியார் பராமரிப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் இது தொடர்பில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வீதியோரங்களில் வாழும் சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளது.

அவற்றில் 3,000 ரூபாவை அவர்கள் தங்கி வாழும் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கவும் மிகுதி 2,000 ரூபாவை சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி சேமிப்புத் திட்டம் ஒன்றில் வைப்புச் செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக தேசிய சேமிப்பு வங்கியின் ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 205128

Search

விளம்பரங்கள்