‘டித்வா’ புயல் பாதிப்புகளால் சேதமடைந்த; பாடசாலைகளை மீள கட்டியெழுப்ப – இலங்கை கடற்படை பங்களிப்பு.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
பதுளை மாவட்டத்தை கடந்த ‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக இலங்கை கடற்படை பங்களித்து வருகிறது. தற்போது, பதுளை மற்றும் பசரை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி, பதுளை கல்வி வலயங்களில் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ ஆதரவை வழங்கும் பணியில், பிபிலேகம மகா வித்தியாலயம், அல் அமீன் வித்தியாலயம், ஸ்ரீ கனேஷா தமிழ் வித்தியாலயம், விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம் மற்றும் மிஹிது பாலர் பாடசாலை ஆகியவை கடற்படையின் கலைத்துவ பங்களிப்பால் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், “க்ளீன் ஸ்ரீ லங்கா” தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் முக்கிய பங்காளியாக இருக்கும் இலங்கை கடற்படை, “மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை” என்ற கருப்பொருளை நனவாக்கும் வகையில் பாடசாலை வளாகங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறது.





