உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மையமாக மாறிவரும் உன்னிச்சை குளம்; நீராடி மகிழும் சுற்றுலா பயணிகள்.!!!
(ஜே.கே)
கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான உன்னிச்சை குளம் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரதேசமாக மாறிவருகிறது.
உன்னிச்சை குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நீராடி வருவதை அவதானிக்க முடிகின்றது.
அருவி போல் பாய்ந்து வரும் குளத்தின் நீரில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அதிகளவிலான இளைஞர்களும் முழு நாளும் நீராடி மகிழும் காட்சிகள் பலரை கவரும் காட்சிகளாக மாறிவருகிறது.
இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செங்கலடி பிரதேச சபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
