இறந்த நிலையில் மற்றுமொரு இராட்சத முதலை; காத்தான்குடி வாவியில் கரையொதுங்கியது.!!!
(ஜே.கே)
இறந்த நிலையில் இராட்சத முதலையொன்று காத்தான்குடி வாவியில் கரையொதுங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதே வாவியில் 15 நாட்களுக்குள் இறந்து கரையொதுங்கிய இரண்டாவது முதலை இதுவாகும்
கடந்த மாதம் இறுதி பகுதியில் இராட்சத முதலையொன்று இதே வாவியில் இறந்து கரையோதுங்கியது . நேற்றிரவு இரண்டாவது முதலை இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது
குறித்த வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அடிக்கடி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முதலை இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது
கரை ஒதுங்கிய முதலையை பார்வையிட அதிகளவிலான மக்கள் கூடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது
இறந்த இந்த முநலை 8 அடியைக்கொண்டதென தெரிவிக்கின்றனர்.









