மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்.!!!
மட்டக்களப்பு கிரான் குளம் பகுதியைச் சேர்ந்த தாயொருவர், ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ள அரிய சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கிரான் குளத்தைச் சேர்ந்த சிவா – மனோஜினி தம்பதியினர், திருமணத்திற்கு பின்னர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்த அரிய வரமாக ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, பிறந்த ஐந்து குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாகவும், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குழுவின் விசேட கண்காணிப்பில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த அபூர்வமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.