உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிறது சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதமர் அதிபர் எஸ். பேரின்பராசா தெரிவித்தார்

நேற்றிரவு 8 15 மணிக்கு கொழும்பு நோக்கி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட பாடும்மீன் புகையிரதம் கல்லோயாவில் யானைகளுடன் மோதியதில் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன

இதனால் போக்குவரத்து பாதையில் ஏற்பட்டுள்ள சீரின்மை காரணமாக மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன

இன்று அதிகாலை 1.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புளத்திசி கடுகதி புகையிரத சேவை மற்றும் இன்று காலை 6:15 மணிக்கு கொழும்புக்கு செல்லவிருந்தபுகையிரத சேவை உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார் .

திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும் மீண்டும் சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722335

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time