போதைப் பாவனை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5291 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக; மாவட்ட போதையொழிப்பு மாநாட்டில் தகவல்.!!!
(ஜே.கே)
கடந்த ஒரு வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதையுடன் தொடர்புடைய 5291 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5969 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப் பாவனை மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு மாவட்ட இணைப்பாளர் பற்குணம் தினேஷ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட போதையொழிப்பு செயலியின் மாவட்ட மாநாடு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட உளநல வைத்தியகாரி டாக்டர் டான் சௌந்தரரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த போதையொழிப்பு செயலணி மாநாட்டில் போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், போதைப் பொருள் விற்பனையாளர்களைக் கண்டுபிடித்தல், மதுபாவனையை கண்டறிதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படன.







