மட்டக்களப்பு – கல்லடியில் கத்திக்குத்துச் சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை கல்லடி பிரதான வீதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
31 வயதுடைய பேத்தாழை வாழைச்சேனையைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் சோகோ போலீசாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.


