ஆரம்பமானது Hulftsdorp புத்தகக் கண்காட்சி 2025.!!!
இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெறும் Hulftsdorp புத்தகக் கண்காட்சி 2025 இன்று (17) ஆரம்பமாகியது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இந்தப் புத்தகக் கண்காட்சி இலங்கை சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சட்டக் கல்லூரியின் முதல்வர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு, இலங்கை சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். சட்டக் கல்லூரியின் உள் மற்றும் வெளி மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மட்டுமல்லாமல், அரச, தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இதில் பங்கேற்க முடியும்.









