உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சிக்கான விரிவான மூலோபாயத் திட்டம் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தல்.!!!

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை அதிக வினைத்திறன் கொண்ட, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையாக மாற்றி, பொதுமக்களுக்கு கௌரவமான மற்றும் நம்பகமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து துறையிலும் விரைவான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பிரவேசம், பாதுகாப்பு ஆகிய ஐந்து தூண்களின் கீழ் அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள மூலோபாயத் திட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

‘Lanka Metro Transit’ முன்னோடித் திட்டம்
கொழும்பு நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, ‘Lanka Metro Transit’ பஸ் சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பஸ்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

கொழும்பைச் சுற்றியுள்ள ஆறு பிரதான வீதிகள் ஊடாக இந்தத் திட்டம் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மேல் மாகாணத்தில் தொடங்கப்பட்ட பின், காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எட்டு பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு நகருக்கு நாளாந்தம் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, பயணிகளைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்ப்பதே பிரதான இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டது. பஸ்களுக்கான முன்னுரிமைப் பாதைகளை அடையாளம் காண்பதும், அவற்றின் வினைத்திறனைப் பேணுவதும் அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பஸ் சேவைகளுக்கான ‘கிளஸ்டர்’ முறை
தற்போது ஒழுங்கீனமாக இயங்கி வரும் பஸ் சேவைகளுக்குப் பதிலாக, பஸ் நிறுவனங்கள் (Cluster System) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சிறந்த போக்குவரத்துச் சேவையே மக்களின் முதன்மை தேவையாகும் என்றும், அது எந்த வடிவில் வழங்கப்படுகிறது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முறையின் கீழ், பஸ் உரிமையாளர்களின் வாகனங்களை இணைத்து ஒரு நிறுவனம் உருவாக்கப்படுவதுடன், லாபம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசாங்கம் ஊடாக சலுகைகள் வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது. பஸ் உரிமையாளர்கள், பஸ் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய தரப்புகளுக்கிடையில் உரிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பல்வகைப் போக்குவரத்து மையங்கள்
பல்வகைப் போக்குவரத்து மையங்களை (Multi-modal Transport Hubs) திட்டமிடும் போது, புகையிரத சேவைகளை மையமாகக் கொண்டு, ஏனைய போக்குவரத்து சேவைகளை அவற்றுடன் ஒருங்கிணைப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். களனி வெளி புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான மின்னணு கட்டண முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தொழிலாளர்களின் நலன் மற்றும் சட்ட ஒழுங்கு
போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பணி நிபந்தனைகள் சீர்செய்யப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் மற்றும் நலன்புரி சேவைகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தண்டப்பணம் அறவிடல் (On-site Fine System) மற்றும் தகுதி இழப்பு புள்ளிகள் திட்டம் (Demerit Point System) தொடர்பான தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. Gov.pay மூலம் இந்த செயல்முறை சீர்செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த 6–7 மாதங்களுக்குள் முழுமையான நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

சிசு சரிய மற்றும் தேசிய போக்குவரத்து ஆராய்ச்சி மையம்
‘சிசு சரிய’ பேருந்து சேவைக்காக 2025 ஆம் ஆண்டில் ரூ. 2,200 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ரூ. 500 மில்லியன் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை மேலும் திறம்படச் செய்து, மாணவர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாட்டின் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (Centre for Transport Research and Development) ஒன்றை நிறுவுவது குறித்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை புகையிரதத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700896

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time