உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

ஆயிரக்கணக்கில் அதிகரிக்கப்படும் அரச ஊழியரின் கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்.!!!

துறைமுக அதிகாரசபை (Sri Lanka Ports Authority) ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த கொடுப்பனவு 60,000. ரூபாவினால் அதிகரிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவு 160,000 ரூபாவக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர் பொறியாளர் கனக ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வருடம் வழங்கப்படவுள்ள 160,000 ரூபா கொடுப்பனவு ஏப்ரல் மாதத்தில் 80,000 ரூபாவாகவும், மீதமுள்ள 80,000 ரூபாய் டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுக அதிகாரசபையினால் ஈட்டப்படும் லாபத்தில் 5 பில்லியன் ரூபாய் சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

துறைமுக அதிகாரசபை ஊழியர்களில் 90 சதவீதத்தினரின் மாதச் சம்பளம் 3அல்லது 4 இலட்சத்திற்கும் அதிகமாக காணப்பட்டது.

ஒரு சராசரி தொழிலாளி மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவதாகவும், கொழும்பு துறைமுகத்தில் உள்ள JCT முனையத்தில் பணிபுரியும் ஒரு சராசரி ஊழியர் மாதத்திற்கு 600 முதல் 700 மணிநேரம் வரை கூடுதல் நேரம் வேலை செய்வதாகவும் நிர்வாக இயக்குநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722243

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time