மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த கணவன்: பொலிஸில் சரண்.!!!
காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆரம்பக் கட்ட விசாரணைகளின் படி, குடும்பப் பிரச்சினையைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், உயிரிழந்த மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, அவருடன் தகாத தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்து சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவர் இன்று உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

