உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!!!

குருநாகல் பகுதியில் அரிசியை பதுக்கி விற்பனைக்கு இல்லை என கூறிய வியாபாரிக்கு எதிராக, நுகர்வோர் அதிகார சபையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த வியாபாரி அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் (21) வியாபாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, வியாபாரி தனது தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புடைய 237 கீரி சம்பா அரிசிப் பொதிகளை அரசுடைமையாக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வியாபாரிக்கு 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், பதுக்கல் மற்றும் மோசடி செய்வதன் மூலம் நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

🔗 *JOIN OUR Whatsapp Group*: https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5

🔗 *FB PAGE LINK*: https://facebook.com/spotnews24/

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722327

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time