ஈரான் இராணுவம் UAE துறைமுகங்களில் எச்சரிக்கை: குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக விலக வேண்டும்.!!!
ஈரான் இராணுவம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துறைமுகங்களை தாங்கள் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதுகின்றனர் என்றும், அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக விலகி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளது.
தெஹ்ரான், தனது தேசிய இறையாண்மை மற்றும் நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக, UAE துறைமுகங்கள், துறைமுகத் தளங்கள் மற்றும் அமெரிக்க இராணுவம் மறைந்திருக்கும் இடங்களில் உள்ள “அமெரிக்க எதிரி ஏவுகணைகள்” மீது தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு சட்டபூர்வமாக உள்ளதாக கதாம் அல்-அன்பியா மத்திய செயல்பாட்டு கட்டளை தெரிவித்துள்ளது.
அறிக்கையில், பொதுமக்கள் துறைமுகப்பகுதிகளை உடனடியாக விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.