உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மாடுகளை திருடி லொறியில் ஏற்றிச்சென்ற சந்தேக நபர் கைது.!!!

களுத்துறை – புலத்சிங்கள பகுதியில் மாடுகளை திருடி லொறியில் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலத்சிங்கள பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து லொறி ஒன்றை வாடகைக்கு எடுத்து திருடிய மாடுகளை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மாடுகளையும், வாடகைக்கு எடுக்கப்பட்ட லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

திருடிய மாடுகளை பண்டாரகம, அட்டலுகம பகுதிக்கு கடத்திச் செல்ல சந்தேகநபர் திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700718

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time