துப்பாக்கிச் சூட்டில் தந்தையும், மகளும் பலி.!!!
மித்தெனிய பொலிஸ் பிரிவில், கடவத்த சந்தியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 39 வயது தந்தையும், 06 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்பொத்த பகுதியை சேர்ந்த
அருணா விதானகம என அழைக்கப்படுகின்ற கஜ்ஜா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும், மகளும் காயமடைந்த நிலையில் மகள் தங்காலை வைத்தியசாலையிலும் மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 6 வயது மகள் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டுக்காக T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.