மூதூரில் பேரூந்து – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; 33 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!!!
மூதூரில் பேரூந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 33 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (01) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மினுவாங்கொடையிலிருந்து சேருவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5