உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 6, 2025

Hot News

நகர அபிவிருத்தித் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு; உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை.!!!

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நகர அபிவிருத்தித் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், கொழும்பு மாவட்டத்தில் கால்வாய் சுத்திகரிப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத் திட்டங்கள், நீர்த்திட்டங்கள் மற்றும் வீடமைப்பு உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்ட உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரசல் அபோன்சு, கபில ஜனக்க பண்டார ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related News

Total Websites Views

Total Views: 182591

Search

விளம்பரங்கள்