அவுஸ்திரேலிய அணியுடன் நாளை மறுதினம் காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியுடன் அண்மையில் இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது அவர் காயமடைந்தார்.
இதன் காரணமாக அவரால் தொடர்ந்தும் போட்டிகளில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக ஓசத பெர்னாண்டோ திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.