இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ராஜ்கோட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் லியம் லிவிங்ஸ்டன் 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் 172 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 2 – 1 எனும் அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.