புனித ரமழானை முன்னிட்டு சவூதி அரேபியா இலங்கைக்கு 50 மெட்ரிக் டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தூதுவர் ஹாலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் அதை உத்தியோகபூர்வமாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.