எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை – பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்: லிட்ரோ உறுதி.!!!
நாட்டில் எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், தேவைக்கேற்ப போதுமான அளவு எரிவாயு இருப்பு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் தேவையற்ற வகையில் பதற்றமடைய வேண்டாம் என பொதுமக்களிடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மொத்தம் 2 இலட்சத்து 84 ஆயிரம் (284,000) வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இன்று (19) முதல் சனிக்கிழமை வரை கூடுதலாக 3 இலட்சத்து 51 ஆயிரம் (351,000) வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், வதந்திகளை நம்பாது அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.