பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு ரூ. 21.78 மில்லியன் நிதி ஒதுக்கீடு: பிரதமரின் தலையீட்டில் கல்வி அபிவிருத்திக்கு முக்கிய ஆதரவு.!!!
கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரணி அமரசூரிய, மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் பேரில் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, கல்வி அமைச்சினால் புதிய பாடசாலை கட்டிடம் அமைப்பதற்காக ரூ. 21.78 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுத்த பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரணி அமரசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோருக்கு, பட்டிருப்பு தேசிய பாடசாலை சமூகம் தங்களது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளது.





