உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

கங்காருகளை வேட்டையாடிய சிங்கங்கள்.!!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி நேற்று (14) இடம்பெற்றது.

அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 101 ஓட்டங்களையும், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதேபோல், நிஷான் மதுஷ்க 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Related News

Total Websites Views

Total Views: 194566

Search

விளம்பரங்கள்