அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர.!!!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினூடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முதல் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தோம், மின் கட்டண விலையை குறைத்தோம்.
என்னுடைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைகள் செய்துள்ளோம்.
மேலும் விவசாய துறைக்கு தேவையான உர மானியத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.