ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டம்; வெற்றிகரமாக நிறைவு.!!!
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாங்கள் நினைப்பதும் ஜனாதிபதி நினைப்பதும் ஒன்றாக இருக்கின்றது என கூட்டம் முடிந்தப்பின் எதிர்கட்சியின் முக்கிய கொரடா எம்.பி. ஹர்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









