இலங்கை வருகிறார்; இந்திய பிரதமர் நரேந்திர மோடி.!!!
எதிர்வரும் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 06 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்தியப் பிரதமர், சம்பூருக்கு ஹெலிகொப்பரில் சென்று மின்திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதே போன்று, அநுராதபுரம் ஸ்ரீமகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.