ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் பையை திருடிய சந்தேக நபர் கைது.!!!
உனவட்டுன கடற்கரை பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகே, ஆஸ்திரேலியச் ஊடகவியலாளரிடம் இருந்து பையை திருடிய சந்தேக நபரை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்தனர். இளம் பெண் ஊடகவியாளர் தனியாக இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், அவரிடமிருந்து ஐபோன், வெளிநாட்டு பணம் மற்றும் வங்கி அட்டைகள் கொண்ட பை திருடப்பட்டது.
உடனடியாக உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து, சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நாளை திங்கட்கிழமை (05) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிகழ்வை தொடர்புடைய பொலிஸார் குழு தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.