தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.!!!
கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் நிதியைப் பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
அருண் தம்பிமுத்து கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.