உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக மாணவர்கள்; தடுத்து நிறுத்திய பொலிஸார்.!!!

யாழ். பல்கலைக் கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் புதன்கிழமை (26) கவனயீரப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீரப்பு போராட்டமானது பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் திருநெல்வேலி சந்தியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பொழுது ”இலவசக் கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு” எனும் தொனிப்பொருளில் கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நியாயமற்ற தேர்வு பரீட்சை முறையை உடனடியாக நிறுத்து, ஆட்சி மாறியது போல பட்டதாரிகளின் வாழ்க்கை மாறுமா, நியாயமற்ற தேர்வு பரிட்சையால் கேள்விக்குறியாகப் பட்டதாரிகளின் கனவு, தாதியர் பட்டதாரிகளை உடனடியாக அரச சேவைக்கு அமர்த்து, மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞான பட்டதாரிகளை உடனடியாக வேலைக்கு அமர்த்து ஆகிய கோஷங்களை எழுப்பப்பட்டன.

தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கவனயீரப்பு போராட்டம் தொடர்பில் சுகாதார விஞ்ஞான பீடம் கிஸ்னுயன் தெரிவிக்கையில், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து தாதியியல், மருந்தாக்கவியல், மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞானம், ஆகிய பதவி நிலை வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்களை உள்ளீர்ப்பதற்காக அரச பல்கலைக்கழகங்களில் முன்னபோதும் இல்லாத வகையில் பொது உளர் சார்பு பரீட்சை இணை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தப் பரீட்சை எமக்கு தேவையற்ற ஒன்று எனவும் நான்கு வருடங்கள் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற உமாக்கு வேலை வாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறான தடை தாண்டல் பரீட்சைகள் எங்களுடைய தகுதியை தீர்மானிப்பதாக அமையவில்லை.

மேலும் இதுவரை காலமும் பாடப்பெறுமதிக்கான தரப்புள்ளி சுட்டெண் ( GPA) இன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகம் மூலம் பதவி நிலை வெற்றிடங்கள் நிரப்பப்படும். ஆனால் தற்பொழுது ஜிபிஏ சுட்டங்களை கொண்டிருக்காத தகுதியற்றவர்கள் கூட வேலை வாய்ப்பு இணைத்துக் கொள்ளப்படலாம் ஆகவே இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722236

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time