வேட்பாளர் 85 வாக்கு அட்டைகளுடன் கைது.!!!
ஐக்கிய மக்கள் சக்தியில் புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்கு அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, சந்தேக நபரிடம் இருந்து புத்தளம் தேர்தல் அதிகாரியினால் வழங்கப்பட்ட 85 வாக்கு அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸாரினால் புத்தளம் ரத்மால்யாய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான வாக்கு அட்டைகள் தபால்காரரால் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான தபால்காரர் அப்பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.