ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.!!!
(றியாஸ் இஸ்மாயில்)
சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் பாரியார் பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) சிறப்பாக நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தலைமையேற்ற இந்நிகழ்வில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நூலை நயம் செய்தமை சிறப்புரியதாகும்.
நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத், ஜே.ஜே. பவுண்டேசன் நிறுவனரும் பணிப்பாளருமான கலாநிதி அல்ஹாஜ் ஐ. வை. எம். ஹனீப், சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், முஹமட் ஷிபான் காரியப்பர் உள்ளிட்ட பல இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.










