உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.!!!

(றியாஸ் இஸ்மாயில்)

சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் பாரியார் பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) சிறப்பாக நடைபெற்றது.

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தலைமையேற்ற இந்நிகழ்வில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நூலை நயம் செய்தமை சிறப்புரியதாகும்.

நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத், ஜே.ஜே. பவுண்டேசன் நிறுவனரும் பணிப்பாளருமான கலாநிதி அல்ஹாஜ் ஐ. வை. எம். ஹனீப், சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், முஹமட் ஷிபான் காரியப்பர் உள்ளிட்ட பல இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884681

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time