02 கிலோ வெளிநாட்டு கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது – கடற்படை அதிரடி நடவடிக்கை.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம், சாலியவெவ பகுதியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து ஞாயிற்றுக்கிழமை (22) நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளையின் பண்டுகாபய நிறுவனம் மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிமன்னார்வினர் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், சாலியவெவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.
சோதனையின் போது சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர், கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.