மட்டக்களப்பில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – 17 வயது சிறுவன் கைது.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி வியாழக்கிழமை அதிகாலை தனது வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் தேடிச் சென்றபோது, வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞனை கண்டுள்ளனர்.
அச்சந்தேகநபரை பெற்றோர் பிடித்து, உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.