உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

உயர்கிறது லிட்ரோ எரிவாயு விலை: இன்று நள்ளிரவு முதல் அமுல்.!!!

இலங்கையில் லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகின்றன என்று அந்த நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை விவரங்கள் பின்வருமாறு:

– 12.5 கிலோ சிலிண்டர் – ரூ.300 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ.3,990
– 5 கிலோ சிலிண்டர் – ரூ.120 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ.1,602
– 2.3 கிலோ சிலிண்டர் – ரூ.56 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ.750

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு விலையில் காணப்பட்டிருந்த நிலைத்தன்மை, இந்த திடீர் விலை உயர்வினால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த உயர்வு நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாதாந்திர செலவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லிட்ரோ விற்பனை முகவர்களிடமும் இந்த புதிய விலைகளே அமுல்படுத்தப்படும் என நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806094

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time