ஐஸ் போதைப்பொருளுடன் 28 வயது வியாபாரி கைது; தடுத்து வைத்து விசாரணை.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் குறிச்சி பிரதேசத்தில் 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் 28 வயதுடைய ஐஸ் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க தெரிவித்தார்
நேற்றிரவு (10) காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது முதலாம் குறிச்சி அல் அக்ஸா ஒழுங்கையில் வைத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10.150 கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயகாவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறூப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி நபரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



