வாழைச்சேனை புகையிரதத்தில்; பெண்ணின் நகை மற்றும் கைப்பை பறிப்பு – மடக்கிப்பிடித்த இளைஞர்கள்.!!!
கதுறுவெலயிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப்பயணித்த புகையிரதத்தில் பயணித்த பெண்னிடம் நகை மற்றும் கைப்பை என்பவற்றை பறித்து தப்பியோடிய சந்தேக நபர் பிரதேச இளைஞர்களால் பிறைந்துரைச்சேனை அல் அக்ஸா பள்ளிவாயல் பிரதேசத்தில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளது.
குறித்த புகையிரதம் வாழைச்சேனை புகையிரதத்தில் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பந்தைப் பயன்படுத்தி பெண்ணின் நகையையும் கையிலிருந்த பையையும் சடுதியாக பிடிங்கிக்கொண்டு தப்பிச்செல்லும் போதே இவ்வாறு மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொலன்னறுவ, கல்லெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது, வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.