95,000 மில்லி லீட்டர் கசிப்புடன்; 30 பேர் பொலிசாரினால் கைது.!!!
(ஜே.கே)
சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப் பொருட்களுடன் 30 பேர் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டட்பட்ட ஆரையம்பதி, தாளங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், நாவற்குடா, கல்லடி உட்பட்ட பிரதேசங்களில் பொலிசார் நடாத்திய திடீர் சுத்தி வளைப்புகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



