ஹபரணை – பொலன்னறுவை வீதியில் பேருந்து விபத்து: 10 பேர் காயம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி.!!!
ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் மோதியதுடன், நெல் அறுவடை இயந்திரத்தை எடுத்துச் சென்ற உழவு இயந்திரத்துடனும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோதலின் விளைவாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்துகளில் பயணித்த ஏழு பேர் உட்பட மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் மேலதிக சிகிச்சைக்காக தம்புல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.