காத்தான்குடி – கல்முனை பிரதான வீதியில் கார்–மோட்டார்சைக்கிள் விபத்து; காலை உணவு விற்பவர் காயம் – வீதியில் சிதறிய உணவுப் பொருட்கள்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இன்று ( 22) காலை விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் கிரான்குளம் தர்மபுரம் சந்தியில் வைத்து வீதியை கடக்க முற்பட்ட காலை உணவு விற்பனை செய்பவரின் மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாந்திக்கு காயம் ஏற்பட்ட நிலையம் விற்பனைக்காக மோட்டார்சைக்கிளில் எடுத்துவரப்பட்ட காலை உணவுகள் அனைத்தும் வீதியில் சிதறிக் காணமுடிந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரண்களை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.



