390 உலமாக்களுக்கு: உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.!!!
-கற்பிட்டி நிருபர் சியாஜ்-
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (12) புத்தளம் நகரக் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி தலைமையில் இடம்பெற்றது.
புத்தளம் நகரக் கிளைக்குட்பட்ட கரைத்தீவு, இளவங்குளம் தொடக்கம் நாகவில்லு, கரிகட்டை வரையிலான பகுதிகளைச் சேர்ந்த சுமார் 390 உலமாக்களுக்கு தலா ரூ.12,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு மூலம் புனித ரமழான் காலத்தை முன்னிட்டு உலமாக்களுக்கு உதவியாக இவ்வுலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

